The Financial Assistance Scheme phone lines will be closed for maintenance on Wednesday 26 February 2025.

நிதி உதவித் திட்டம் (Financial Assistance Scheme help in Tamil)

வன்முறைக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவித் திட்டம் உதவ முடியும். இது போன்ற செலவுகளுக்கு பணம் செலுத்துவதற்கான உதவியை நீங்கள் பெறலாம்:

  • ஆலோசனை
  • மருத்துவ செலவுகள்
  • வருமான இழப்பு
  • உங்களை மீட்க உதவும் பிற ஆதரவுகள்.

நீங்கள் நிதி உதவித் திட்ட உதவி எண்ணை அழைக்கலாம்:

  • நிதி உதவிக்கு விண்ணப்பிப்பதற்கான உதவியைப் பெறுவதற்கும்
  • உங்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றுகள் பற்றிய ஆலோசனையைப் பெறவும், மற்றும்
  • விண்ணப்ப முடிவுகளை விவாதிக்கவும்

உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டால், உங்களுக்காக உதவி எண்ணை அழைக்க யாரையாவது கேட்கலாம்.

நீங்கள் உதவி எண்ணை 1800 161 136 என்ற எண்ணில் அழைக்கலாம்.

பொது விடுமுறை நாட்களைத் தவிர, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8:30 முதல் மாலை 5:30 வரை உதவி எண் திறந்திருக்கும்.

தகுதி

விக்டோரியாவில் ஒரு வன்முறைக் குற்றத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டால் நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் இது உடல் அல்லது மன காயம் அல்லது அதிர்ச்சியாக இருக்கலாம்.

வன்முறைக் குற்றத்தை நீங்கள் காவல்துறையில் புகாரளிக்க வேண்டும் (காவல்துறையில் புகார் செய்யாததற்கு உங்களுக்கு சிறப்புச் சூழ்நிலைகள் இல்லாவிட்டால்) குற்றவாளி மீது குற்றம் சாட்டப்படவோ அல்லது தண்டனை விதிக்கவோ தேவையில்லை.

என்ன நடந்தது என்பதைப் பொறுத்து, நீங்கள் முதன்மை, இரண்டாம் நிலை அல்லது தொடர்புடைய பாதிக்கப்பட்டவர் என வகைப்படுத்தலாம்.

பின்வரும் சந்தர்ப்பங்களில் நீங்கள் முதன்மையான பாதிக்கப்பட்டவர் எனில்:

  • உங்களுக்கு எதிராக குற்றம் செய்யப்பட்டது
  • நீங்கள் குற்றத்தைப் பார்த்த, கேட்ட அல்லது பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை, அல்லது
  • பாதிக்கப்பட்ட மற்றொருவரைக் காப்பாற்ற, வன்முறைக் குற்றத்தை நிறுத்த அல்லது குற்றம் செய்த நபரைக் கைது செய்ய முயன்று நீங்கள் காயமடைந்தீர்கள்.

பின்வருவனவற்றில் நீங்கள் இரண்டாம் நிலை பாதிக்கப்பட்டவர் எனில்:

  • நீங்கள் குற்றத்திற்கு சாட்சியாக இருந்தீர்கள், அல்லது
  • நீங்கள் ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் என்பதால் நீங்கள் காயமடைந்துள்ளீர்கள்.

நீங்கள் தொடர்புடைய பாதிக்கப்பட்டவராக இருந்தால்:

  • நீங்கள் ஒரு வன்முறைக் குற்றத்தால் இறந்தவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்
  • நீங்கள் ஒரு வன்முறைக் குற்றத்தின் காரணமாக இறந்த நேசத்திக்குரியவரைச் சார்ந்து இருக்கிறீர்கள், அல்லது
  • வன்முறைக் குற்றத்தின் காரணமாக இறந்த ஒரு நேசத்திக்குரியவருடன் நீங்கள் தனிப்பட்ட முறையில் நெருங்கிய உறவில் இருந்தீர்கள்.

நிதி உதவியின் கீழ் வரும் குற்றங்களின் எடுத்துக்காட்டுகள்

  • மனிதக்கொலை
  • திடீர் தாக்குதல்
  • கற்பழிப்பு
  • கொலை மிரட்டல்கள்
  • கொள்ளை
  • பொறுப்பற்ற முறையில் காயத்தை ஏற்படுத்துதல்
  • குற்றமுடைய வாகனம் ஓட்டுதல்
  • பாலியல் குற்றங்கள்
  • பட அடிப்படையிலான பாலியல் குற்றங்கள்
  • பின்தொடர்தல்
  • ஆட்கடத்தல்
  • வீட்டில் படையெடுப்பு

பிற வகையான குற்றங்கள் நிதி உதவிக்கு தகுதியுடையதாக இருக்கலாம் ஆனால் இங்கே பட்டியலிடப்படவில்லை.

இந்தத் திட்டம் உள்ளடக்காதவை:

  • சொத்து சேத குற்றங்கள்
  • தலையீட்டு உத்தரவுகளை மீறுவது வன்முறையில் ஈடுபடாத பட்சத்தில்.

நீங்கள் பெறக்கூடியவை

ஒவ்வொரு நபரின் சூழ்நிலையும் வேறுபட்டது. நாம் செலுத்தக்கூடிய தொகை மற்றும் நாம் செலுத்தும் பொருட்களின் வகைகள் இவற்றைச் சார்ந்தது:

  1. நீங்கள் பாதிக்கப்பட்டவர் வகை - முதன்மை, இரண்டாம் நிலை அல்லது தொடர்புடைய பாதிக்கப்பட்டவர்
  2. உங்களுக்கு எதிராக நடந்த குற்றம்
  3. நீங்கள் அனுபவித்த காயங்கள்.

ஒரு முதன்மை பாதிக்கப்பட்டவர் $60,000 வரை பெறலாம் (இது ஆண்டுதோறும் அட்டவணைப்படுத்தலுக்கு அதிகரிக்கலாம்) மற்றும் ஏதேனும் சிறப்புப் கட்டணம்.

நீங்கள் அனுபவித்த தீங்கை அங்கீகரிக்கும் வகையில் $25,000 வரை சிறப்புப் கொடுப்பனவுக்கு தகுதியுடையவராக இருக்கலாம். இந்தக் கொடுப்பனவு வன்முறைக் குற்றத்தின் வகை மற்றும் உங்கள் காயங்களைப் பொறுத்தது.

இரண்டாம் நிலை மற்றும் தொடர்புடைய பாதிக்கப்பட்டவர்கள் $50,000 வரை பெறலாம் (இது ஆண்டுதோறும் அட்டவணைப்படுத்துதலுக்கேற்ப அதிகரிக்கலாம்).

உள்ளடக்கப்பட்ட சேவைகள்

அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்:

  • பதிவுசெய்யப்பட்ட உளவியலாளர், பதிவுசெய்யப்பட்ட ஆலோசகர் அல்லது அங்கீகாரம் பெற்ற மனநல சமூக சேவகர் ஆகியோரின் ஆலோசனை அமர்வுகள்
  • நியாயமான மருத்துவச் செலவுகள் மற்றும்
  • விதிவிலக்கான சூழ்நிலைகளில் உங்கள் மீட்புக்கு உதவும் மற்ற செலவுகள்.

முதன்மை பாதிக்கப்பட்டவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்:

  • வன்முறைச் செயலுக்குப் பிறகு 2 ஆண்டுகள் வரை, $20,000 வரை வருமான இழப்பு
  • குற்றத்தின் காரணமாக உடைந்த அல்லது இழந்த ஆடைகள் (கடிகாரங்கள் மற்றும் நகைகள் உள்ளடங்காது), மற்றும்
  • பாதுகாப்பு அலாரங்கள் மற்றும் கேமராக்கள், மொபைல் ஃபோன்கள் மற்றும் இடமாற்றத்திற்கான செலவுகள் போன்ற உங்களின் உடனடிப் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான பாதுகாப்புப் பொருட்கள்.

இரண்டாம் நிலை பாதிக்கப்பட்டவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்:

  • விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் வருமான இழப்பு.

சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்:

  • தங்கள் அன்புக்குரியவர் இறந்த 2 ஆண்டுகளுக்குள் அவர்கள் தங்கள் அன்புக்குரியவரிடமிருந்து பெற்றிருக்கும் பணம், மற்றும்
  • அவர்களின் அன்புக்குரியவரின் மரணம் காரணமாக மற்ற செலவுகள்.

உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்வதற்காக நீங்கள் காத்திருக்கும் போது, இந்த உதவிகளில் சிலவற்றை உடனடியாக செலுத்த முடியும்.

இது உங்களின் மொத்தக் கட்டணத்தில் இருந்து வெளிவருகிறது மேலும் இது வரை இருக்கலாம்:

  • மருத்துவ மற்றும் பாதுகாப்பு செலவுகளுக்கு $5,000
  • இறுதிச் சடங்குச் செலவுகளுக்காக $19,627
  • 5 ஆலோசனை அமர்வுகள்.

இறுதிச் சடங்கு செலவுகள்

வன்முறைக் குற்றத்தின் காரணமாக இறந்த ஒருவரின் இறுதிச் சடங்கிற்காக பணம் செலுத்திய எவரும் இறுதிச் சடங்கின் செலவுகளை ஈடுகட்ட விண்ணப்பிக்கலாம்.

இறுதிச் சடங்குச் செலவுகள் முதன்மை, இரண்டாம் நிலை அல்லது தொடர்புடைய பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் அதிகபட்சத் தொகையில் கணக்கிடப்படுவதில்லை.

விண்ணப்பம் தயாரித்தல்

நீங்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

உங்கள் விண்ணப்பத்தில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்கள் ஒரு வழக்கறிஞர், வழக்கு பணியாளர் அல்லது பிற நம்பகமான நபரிடம் கேட்கலாம். நீங்கள் ஒரு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும், அதனால் அவர்கள் உங்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக செயல்பட முடியும்.

விண்ணப்பிப்பதற்கு கால வரம்புகள் உள்ளன.

வயது வந்தோர் இதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்:

  • ஒரு பாலியல் அல்லது குடும்ப வன்முறை குற்றத்திலிருந்து 10 ஆண்டுகள், அல்லது
  • பிற வன்முறைக் குற்றங்களிலிருந்து 3 ஆண்டுகள்.

குடும்ப வன்முறை அல்லது சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற வன்முறைக் குற்றங்களில் குழந்தைகளுக்கான கால வரம்பு இல்லை. மற்ற அனைத்து குற்றங்களுக்கும், ஒரு குழந்தை 18 வயதை பூர்த்தி செய்த 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சில சூழ்நிலைகளில், தாமதமான விண்ணப்பங்களை இத்திட்டம் ஏற்றுக்கொள்ளலாம்.

திட்டம் ஒரு முடிவை எடுத்த பிறகு என்ன நடக்கும்?

உங்கள் விண்ணப்பத்தின் மதிப்பீட்டிற்குப் பிறகு முடிவின் எழுத்துப்பூர்வ அறிவிப்பைப் பெறுவீர்கள்.

நீங்கள் முடிவை ஏற்கவில்லை என்றால், நீங்கள் உள் மதிப்பாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். இது முடிவெடுத்த 28 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும்.

உங்கள் விண்ணப்பத்தின் முடிவைப் பெற்ற பிறகு, உங்கள் நிதி உதவிக்கு நீங்கள் மாற விரும்பலாம், இது மாறுபாடு எனப்படும். உங்கள் சூழ்நிலைகள் மாறிவிட்டதால் அல்லது உங்களுக்கு வேறு வழியில் ஆதரவு தேவைப்படுவதால் இது இருக்கலாம்.

திட்டத்தில் இருந்து நிதி உதவி பெறும் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், விக்டோரியா மாநிலத்தின் சார்பாக அங்கீகார அறிக்கையைப் பெறவும், குற்றத்தின் விளைவுகளை ஒப்புக்கொண்டு, அரசின் இரங்கலைத் தெரிவிக்கவும் தேர்வு செய்யப்படலாம்.

வன்முறைக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி எண்

இந்த இலவச உதவி எண் தினமும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். நீங்கள் அழைக்கும் போது, நீங்கள்:

  • ஒரு குற்றத்தைப் புகாரளிப்பது பற்றி ஆலோசனை பெறவும்
  • உங்களுக்கு உதவக்கூடிய பிற சேவைகளைக் கண்டறியவும்
  • நீதிமன்ற நடைமுறைகள் பற்றிய தகவல்களைப் பெறவும்.

உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டால், யாரையாவது கேட்டு வன்முறைக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி எண்ணை அழைத்து, மொழிபெயர்ப்பாளர் ஒருவரைக் கேட்கலாம்.

அழைக்கவும்: 1800 819 817

Updated